புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த “என் மண், என் மக்கள்” நடைபயண வழித்தடம் மாற்றம்

ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- புதிய வழித்தடத்தில் அனுமதி புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

70,000 லாரி அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளதாக நீதிபதிகள் வேதனை. கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி. புதுக்கோட்டை லெம்பலக் குடியில் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை கோரிய பொது நல வழக்கில் நீதிபதிகள் உத்தரவு.