ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 50 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்:சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. […]
பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரண்

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சேனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர்.
ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயம்

ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் பீமவரத்தில் தெலுங்கு தேச கட்சியின் நாரா லோகேஷின் பாதயாத்திரையின்போது மோதல் ஏற்பட்டுள்ளது. பீமாவரம் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு

புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாலவர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரின் உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநங்கையை வெட்டிய கணவர் கைது

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சுக்ரியா (20)இவர் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த நான்கு மாதமாக கார்த்ததிக் மற்ற திருநங்கைகளுடன் பழகி வந்ததால் அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் சுகிரியா தொடர்பை நிறுத்தி வைத்துள்ளார். நேற்று இரவு தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடியில் நின்றிருந்த சுக்ரியாவை காண்பதற்கு வந்த கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் […]
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்கொலை, கொள்ளை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: 3359 காலி பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ற ஆகஸ்ட் 8 அன்று வெளியிட்டது. விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வரும் ஆகஸ்ட் 18 தொடங்கி தற்போது நடந்து வருகிறது. சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17, 2023. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்தத் தேர்வுக்கு http://www.tnusrb.tn.gov.in இணையத்தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி […]
₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா

விருதாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம்சூரமங்கலம்: பிரியாணி கடை சேலம் ஜங்சன் மெயின் ரோடு முதல் கேட் அருகில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு சாப்பிட வந்தவருக்கும், கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அது மோதலாக மாறியது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலானது. இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த கடைக்கு […]