சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்தால் பறிமுதல்..!!

சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவைத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேரை பணியிடமாற்றம் செய்துதலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்து வந்த பொன்னையா ஊரக வளர்ச்சிதுறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.வருவாய்துறை இணை ஆணையராக இருந்து வந்த சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.