ஆன்லைன் விளையாட்டு. பொதுமக்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பு

ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீ |டு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை தாக்கல் செய்தது இதன்படி தவறு செய்பவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை ஒரு கோடி அபராதம் விதிக்கப்படும் ஆன்லைன் சூதாட்ட செய்திகள் தடை செய்யப்படும் இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய சட்டத்தால் 4 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் 20,000 கோடி ஜிஎஸ்டி வரி இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்