ஆன்லைன் விளையாட்டு. பொதுமக்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பு
ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இழப்பதாக அரசு மதிப்பீ |டுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தப்பட்ட தீய விளைவுகள் குறித்து கவலை எழுப்பியுள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு
மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை தாக்கல் செய்தது இதன்படி தவறு செய்பவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை ஒரு கோடி அபராதம் விதிக்கப்படும் ஆன்லைன் சூதாட்ட செய்திகள் தடை செய்யப்படும் இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய சட்டத்தால் 4 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் 20,000 கோடி ஜிஎஸ்டி வரி இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்