வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை. நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்ப்பு மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை […]

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர்.

ஜபில் ரூ.2000 கோடி ஒப்பந்தம் செய்த தமிழக அரசு

தமிழகத்தில் தொழில் தொடங்க ஜபில்(JABIL), ராக்வெல் (ROCKWELL) ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஜபில் ரூ.2000 கோடி முதலீடு – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு – 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அமெரிக்கா நாட்டின் சிகாகோவில்

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயல் திரு.வி.அருண்ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.பிளேக் மோரெட், […]

சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு 8.9.2024 அன்று முற்பகல் திருச்சி-செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர் (வயது 20) த/பெ. ஜியாவுதீன்; கலைவேந்தன் (வயது 19) த/பெ.சண்முகம்: ஆண்டோ (வயது […]

சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டில் ரூ.500 கோடியில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையம் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ஒப்பந்தம் சென்னை மற்றும் கோவையில் ரூ.250 கோடியில் விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரில்

நைக்கி நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் (Chief Supply Chain Officer) திரு.வெங்கடேஷ் அழகிரிசாமி மற்றும் உயர் அலுவலகர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனத்தின் தோல் அல்லாத காவணிகளின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஆடைகள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது, சென்னையின் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் […]

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு

சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் திரு.ஸ்ரீகர்ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு

சான்பிரான்ஸ்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் திரு.ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும்அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு முதலீடுகளை ஈர்க்க சென்னையிலிருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்