பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் – பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு!..

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை காவலில் எடுத்து மாதேஷை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக தகவல் பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாக தகவல் நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
விஷச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? அதை கண்டறிந்து முழுமையாக அழிக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

கருணாபுரம் சம்பவம் குறித்து நேரில் சென்று முழுமையாக விசாரித்து 2 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு முதலமைச்சர் உத்தரவு விஷச்சாராய சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைப்பு. அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஆணையம் 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு..