மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் பொய்யானது. தூத்துக்குடி மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்
மணிமுத்தாறு அணை உடைந்து விட்டதாகவும், அது திறந்து விடப்படுவதால் தாமிர பரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஒரு ஆடியோ வாட்ஸ்அப் குரூப்பில் பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தூத்துக்குடி கேம்பலாபாத் மக்கள் விசாரணையில் இறங்கியபோது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக மணிமுத்தாறு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பேசிய ஆடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தூத்துக்குடி மக்கள் பதட்டப்பட வேண்டாம்.