மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3பேர் உயிரிழந்தனர். தவாய் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையில் தன்னார்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் அளித்துள்ளது.

மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்: கூகி மக்கள் கூட்டணி அறிவிப்பு

மணிப்பூரில் பாஜக., தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூகி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூகி மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் டோங்மங் ஹவோகிப், பாஜகவுடனான உறவை முறித்து கொள்வதாக கவர்னர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக வடகிழக்கு மாநிலத்தை பாதித்த மணிப்பூரில் இனக்கலவரத்தில் 160 க்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டன. இதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மோதலைக் கவனமாகப் […]