கோவை வெடிகுண்டு வழக்கு – 27 வருடத்திற்கு பிறகு முக்கிய நபர் கைது
கோவையில் 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் 27 வருடத்திற்கு பிறகு கைதானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. டெய்லர் ராஜா என அழைக்கப்படும் சாதிக் ராஜா கைதானதை தொடர்ந்து காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோவை நாயகன் புதூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து!

தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீ விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை!
கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த கார் – டிரைவர் உடல்கருகி பலி இருக்கையில் அமர்ந்தபடியே கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார் – இறந்தவர் யார்? என விசாரணை
கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் – கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு
விநாயகர் சதுர்த்தி: சென்னை – கோவை சிறப்பு ரயில்.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 6 பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக 11:45-க்கு கோவை சென்றடையும். இதே போல் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழை மாநகராட்சி ஆணையர் சிவகுருபாகரன் வழங்கினார்
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்
ரூ.10 ஆயிரம் கோடி GST மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்!

போலி பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை நொய்டா போலீசார் கைது செய்தனர். போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் இ-வே பில்களை உருவாக்கி GST மோசடி செய்தது அம்பலம் டெல்லி, நொய்டா, காசியாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சிந்த்வாரா (எம்.பி) ஆகிய இடங்களை சேர்ந்த 45 பேர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா பிரபு (40) என்பவர் […]
“2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார்!”

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
கோவை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி சான்றிதழ் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது