தென்மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழுவினர் வருகை

தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மதுரை வந்தனர். கார் மூலம் புறப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.