வெங்கம்பாக்கத்தில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி

கடல் தண்ணீரில், மழை உச்சி, வயக்காடு சகதி என மாணவ மாணவியர்களுக்கு கோடை கால கராத்தே பயிற்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் பெருமாள் கராத்தே அகடாமியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மலை ஏறுதல், கடல் தண்ணீர் பயிற்சி, வயக்காட்டு சகதியில் கிக்ஸ் […]

திருவனந்தபுரத்தில் தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

திருவனந்தபுரத்தில் தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவன் நிதிஷ் 8 வயது ரிuனீவீtமீ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதல் பரிசை வென்றார். இவர் பல்லாவரம்- -& 2 ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் ஆவார். மேலும் மாணவனின் கராத்தே பயிற்சியாளர் முத்து தேவராஜுக்கு மாணவனின் தாயார் கார்த்திகா நன்றி தெரிவித்தார்.