காமராஜர் பற்றிய பேச்சு -திமுக எம்பிக்கு தலைவர்கள் கண்டனம்
திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார் காமராஜரின் கடைசி காலத்தில் ஏசி வசதி இல்லாவிட்டால் அவர் உடம்பு தாங்காது. கொப்பளம் வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகைகளில் ஏசி வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார் என்று கூறியிருந்தார்.இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி பாரதிய ஜனதாவைச் சேர்ந்த கரு. நாகராஜன் உட்பட பலர் கண்டனம் […]
காமராஜுடன் மோடியை ஒப்பிட்ட தமிழிசை – காங்கிரஸ் எதிர்ப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என பேசி இருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, சர்வாதிகார பாசிச முறையில் மோடியின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறத என குறிப்பிட்டுள்ளார்.
குரோம்பேட்டையில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதா நகரில் உள்ள அவரது சிலைக்கு பி. பழனி, பி.தேவராஜன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் குரோம்பேட்டை வணிகர்சங்கம் பி.ராமகிருஷ்ணன், எஸ்.மீனாட்சி சுந்தரம், ராஜாராம், ராமசுப்பு, ஜி.செல்வகுமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

காமராஜரின் சிலைக்கு நாடார் சங்கங்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் தலைவர் மதிவாணன், பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர் வெற்றிவேல் முருகேசன், முருகேசன் பாக்கியராஜ், மோரிஸ், நாச்சியார் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை

பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் சங்கங்கள் கோரிக்கை பெருங்க்ளத்தூரில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவி பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை […]
குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜரின் 121 வது பிறந்தநாள்

குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமஜெயம் மற்றும் சங்க நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவித்தனர். மேலும் ஜமீன் ராயப்பேட்டை அரசு பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ஊக்கத்தொகை அளித்தனர். விழாவில் எஸ்.மதிவாணன், ஆர்.மோரீஸ், டி.எஸ்.முருகன், என்.எஸ்.பி.சங்கர், எஸ்.டி.சேகர், எஸ்.முருகேசன், வெற்றிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காமராஜரின் 121 வது பிறந்தநாள்

காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லயன் இ.ராஜமாணிக்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்தபோது எடுத்தபடம். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காமராஜரின் பிறந்தநாள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் காவல் நிலையம், ராதாநகரிலும் உள்ள சிலைக்கும் பி.தேவராஜன் (குட்டி), பிரஸ் பி.பழனி, கேசவராஜ் தலைமையில், ராஜாராம் மாலை அணிவித்து கொடியேற்றினார். எஸ்.மீனாட்சி சுந்தரம் இனிப்பு வழங்கினார். விழாவில் என்.நேத்தாஜி, ஆர்.ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஜி.கே.சேகர், ஜி.செல்வகுமார் புருஷோத்தமன், பரசுராமன், முனியாண்டி, ராமசுப்பு பம்மல் ராம கிருஷ்ணன், ஜெயராமன், தனசுந்தரம், இப்ராஹிம், ராஜசேகர், சுப்பிரமணி கருணாகரன் சிவா, செல்வமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.
நாளை மறுநாள் முதல் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு. அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ – மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.