சட்ட சபையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிப்பு

இன்று கேள்வி நேரத்தை ரத்து செய்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யும்படி கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். கள்ளச்சாராயத்தால் 55 பேர் பரிதாபமாக மரணமடைந்த அவலநிலை குறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஷமுறிவு மருந்தான ஹோ பிரசோல் மருத்துக்கு பதில் அல்சருக்கு கொடுக்கும் மருந்து இருப்பதாக புதுச்சேரியில் போய் விவரம் தெரியாமல் பேசுகிறார். […]

விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு

சட்டப்பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார் – ஈபிஎஸ் விஷ சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினோம் சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது பரபரப்பான கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் விற்கப்பட்டிருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்

ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை- ஈ.பி.எஸ்.

விஷச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? அதை கண்டறிந்து முழுமையாக அழிக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

கருணாபுரம் சம்பவம் குறித்து நேரில் சென்று முழுமையாக விசாரித்து 2 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கு முதலமைச்சர் உத்தரவு விஷச்சாராய சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைப்பு. அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஆணையம் 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு..

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு

அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு..