விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்​தின் விழுப்பு​ரம், கடலூர், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களும், புதுச்​சேரி​யும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் அதிகபட்​சமாக 51 செ.மீ. மழை கொட்​டிய​தால், பல பகுதிகள் வெள்​ளக்​காடாகின. பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் ராணுவத்​தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். வங்கக்​கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]