தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (24.1.2024) மதுரை மாவட்டம்‌, அலங்காநல்லூர்‌, கீழக்கரை கிராமத்தில்‌ உலகத்தரத்துடன்‌ கட்டப்பட்டுள்ள கலைஞர்‌ நூற்றாண்டு ஏறுதழுவுதல்‌ அரங்கம்‌ திறப்பு விழாவில்‌, அரங்கத்தில்‌ நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ திருவுருவச்‌ சிலையை திறந்து வைத்தார்

இவ்விழாவில்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழா

சென்னை, தலைமைச்‌ செயலகம்‌, வேளாண்மை துறை கூட்டரங்கில்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும்‌ வகையில்‌ அமைக்கப்பட்ட குழுக்களில்‌ “எழுத்தாளர் –‌- கலைஞர்‌” என்ற குழுவின்‌ கூட்டம்‌, இக்குழுவின்‌ தலைவரும்‌ கூட்டுறவுத்‌ துறை அமைச்சருமான கேஆர்‌.பெரியகருப்பன்‌‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ இணைத்‌ தலைவர்கள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, ஆதிதிராவிடர்‌ நலத்‌துறை அமைச்சர்‌ என்‌.கயல்விழி செல்வராஜ்‌, உறுப்பினர்‌ செயலரும்‌, சமூகநலத்துறை ஆணையர்‌ வே.அமுதவல்லி, உறுப்பினர்கள்‌ ஆர்‌.பூரணலிங்கம்‌, (ஒய்வு), ஆர்‌.பாலகிருஷ்ணன்‌, இ (ஓய்வி, […]

கலைஞர் உரிமைத் தொகை

கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தலைவராக பொறுப்பேற்று ஆறாம்‌ ஆண்டு தொடங்கி மு.க.ஸ்டாலின் கலைஞர்‌‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தலைவராக பொறுப்பேற்று ஆறாம்‌ ஆண்டு தொடங்கியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ (28.08.2023) முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ அமைச்சர்‌ பெருமக்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்சி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: […]

தாம்பரத்தில் கருணாநிதி நினைவுநாள் தி.மு.க அஞ்சலி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அமைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கலைஞருக்கு வீரவணக்கம் கோஷமிட்டனர். மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், ரமணி ஆதிமுலம், டி.ஆர்.கோபி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 38 வது வார்டு பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் திமுக நிர்வாகி சி.ஆர் மதுரை வீரன்

மகளிருக்கு மாதந்தோறும்‌ ரூ.1000/- வழங்கிடும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌, மகளிருக்கு மாதந்தோறும்‌ ரூ.1000/- வழங்கிடும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாமை தொடங்கி வைத்து விழாப்‌ பேரூரையாற்றினார்‌. இந்நிகழ்ச்சியில்‌, நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, வேளாண்மை -உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.என்‌.வி.எஸ்‌. செந்தில்குமார்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஜி.கே. மணி, எஸ்‌.பி. வெங்கடேஸ்வரன்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கி.சாந்தி […]

“தமிழ்நாட்டில் HCL தொடங்க கலைஞரே காரணம்”

கலைஞரை சந்தித்து உரையாடிய பிறகு தான் தமிழ்நாட்டில் HCL நிறுவனங்களை தொடங்கினோம். இன்று ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு கலைஞரே காரணம்.