சென்னையில் தொடர் மழை
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா

விருதாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ₹3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதா, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது. சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரயில்பாதை அருகே மரங்கள், செடி கொடிகளுக்கு தீ வைப்பு..
பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்…