செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 39 வது வார்டு திருமலை நகர் பிரதான சாலையில் கட்டன் கால்வாய் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளருடன் கலந்துரையாடிய செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு முழுமையாக கால்வாய் பணியினை போர்க்கால அடிப்படையில் முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

செம்பாக்கம் மண்டலத்தில் ஜெயேந்திர நகர் மற்றும் நன்மங்கலம் இணைப்பு சாலை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் வீசி சென்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்தன

39வது வார்டு திருமலை நகர் பகுதியில் எக்ஸ்னோரோ தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் ஜெயேந்திர நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் துணையுடன் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் குப்பைகள் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுப்பதாக ஜெயேந்திர நல சங்க குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் நமது மாநகரம் தூய்மை நகரம் நமது பொறுப்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, நீர் நிலைகளை […]

செம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

செம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் 101-வது பிறந்த நாளை ஒட்டி செம்பாக்கம் வடக்கு பகுதி தெற்கு பகுதி சார்பாக செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், சிட்லபாக்கம் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள்‌ தினத்தை முன்னிட்டு, தாம்பரம்‌ மாநகர திமுக தொழிலாளர்‌ அணி சார்பில்‌,

மாநகர அமைப்பாளர்‌ சிட்லப்பாக்கம்‌ இரா.விஜயகுமார்‌ தலைமையில்‌, இன்று தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம்‌ எம்‌எல்‌ஏ எஸ்‌.ஆர்‌.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்‌. அருகே மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ்‌, எஸ்‌.இந்திரன்‌, பகுதிசெயலாளர்கள்‌செம்பாக்கம்‌ இரா.சுரேஷ்‌, கோட்டி உள்பட பலர்‌ உள்ளனர்‌.

செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]

சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

செம்பாக்கம் தெற்கு பகுதி வார்டு எண் 39,40 உள்ள நல சங்கங்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்

உடன் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ராமானுஜம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிட்லபாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் […]