மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு ஐசிஐசிஐ வங்கி சிட்லபாக்கம் கிளையில் டிகேஸ் ஹீல் அண்ட் க்யூர், சிட்லபாக்கம் நிறுவனர் கார்த்திக் மற்றும் டாக்டர்.திவ்யா கார்த்திக் பிசியோதெரபி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்

இதில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்ட்ரல் ஹஸ்தினாபுரம் எம்.ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மற்றும் கிளை மேலாளர் சிவா, துணை கிளை மேலாளர் ராஜாபிரபு மற்றும் தொடர்பு மேலாளர் ஜெயஸ்ரீ முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
குரோம்பேட்டை யூனிட்டி அரிமா சங்கம் சார்பாக நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் மாவட்ட அரிமா ஆளுநர் ஏ.டி.ரவிச்சந்திர ஆதித்தன் கலந்துகொண்டார்

உடன் அரிமா சங்க நிர்வாகிகள் எம்.ஜெயபால், கே.எம்.ஜே.அசோக், சுந்தர்ராமன், எம்.ஐ.டி.விஜய், சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்னதானம்

அஸ்தினாபுரம் அருள்மிகு மகா சதுர் குன்று விநாயகர்- மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் (புற்று) ஆலயத்தில் ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்க இருக்கிறது. நேற்று மதியம் தொழிலதிபர் எம்.ஜெயபால், அஸ்தினாபுரம் லயன் சி.ஆர் மதுரை வீரன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன், சந்திரசேகரன், சி.ஆர்.மூர்த்தி, ஆர்.கே.பில்டர் உரிமையாளர் கண்ணன், ரூபிங் கோ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.