திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா

தாம்பரத்தில் உள்ள பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. தாம்பரத்தில் இயங்கி வரும் Flats Promotion சங்கத்தின் 2026 ஆம் ஆண்டின் குடும்ப கூடுகை விழா மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து துணை தலைவர் . சி. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சங்கத் தலைவர் கோபி வரவேற்புரை நிகழ்த்தினார்.திரைப்பட பின்னணி பாடகர்வேலுமணி பாடல், சிறுவர் சிறுமியரரின் […]

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அனேகமாக 8ந்தேதி ரொக்கப் […]

ஒவ்வொரு ரேஷன் கார்டு மீதும் 4.5 லட்சம் கடன் -அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வீதம் 4.5 லட்சம் கடன் உள்ளது என்று அண்ணாமலை கூறினார் புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையும் 4.5 லட்சம் கடன் உள்ளதுதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]

மக்களை சுரண்டும் திமுக ஆட்சி – எடப்பாடி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: லஞ்சம் வாங்குவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, மக்களை சுரண்டுவதில் திமுக ஆட்சி சிறந்தது… நாட்டு மக்களுக்கு திட்டங்கள் போடுவதில், மக்கள் நலன் பெறுவதில் அதிமுகவின் ஆட்சி சிறந்தது… சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாநிலம் வளமாக இருக்க வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்

திமுத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

புதுக்கோட்டை விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது. திமுக அமைச்சர்கள் அநாகரிகமாக பேசுகின்றனர்; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள், ஆசிரியர்களே போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க அமித் ஷாவால் மட்டுமே முடியும். கரூரில் 41 பேர் பலியானதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்.என்று நயினார் நாகேந்திரன் கூறினார்

தமிழ்நாட்டில்என்.டி.ஏ. ஆட்சி – அமித்ஷா உறுதி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ அரசாங்கம் அமையப் போகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் […]

தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி

உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் (பிடபிள்​யூஎப்) சார்பில் செயல்​படும் விளை​யாட்டு வீரர்​கள் ஆணை​யத்​தின் தலை​வ​ராக இந்​திய பாட்​மிண்​டன் வீராங்​கனை பி.வி.சிந்து தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்​தப் பதவியை வகிப்​பார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திருவள்ளூர் மாவட்ட தவெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.