12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியீடு geapp.tnschools.gov.in- User ID, Password பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஜன.24 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது! பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படப்பை அருகே அதிகாலை மின்கசிவு காரணமாக பர்னிச்சர் தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து, பல லட்சம் மதிப்புள்ள மரப்பொருகள், இயந்திரம், மேற்கூரை எரிந்து நாசம்.
தாம்பரம்:- சென்னை தாம்பரம் அடுத்த படப்பை ஒரத்தூர் சாலையில் அபரஜித்தன் என்பவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார், டேபிள், சேர் உள்ளிட்ட மரப்பொருள்கள் தயாரித்துவந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியை மூடி சென்ற நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீடீர் தீபற்றி எரிந்துள்ளது, இங்கு இதில் மரப்பொருள்கள், இயந்திரங்கள், கம்பெனியில் இரும்பு கூரை உள்ளிட்டவை மல மலவென தீ பிடித்து எரிந்துந்துள்ளது, தகவல் அறிந்த படப்பை, ஒரகடம் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை முழுமையாக […]
பாம்பன் பழைய பாலம் அகற்றும் பணி பிப்ரவரியில் தொடக்கம்…
பிப்ரவரி முதல் 108 ஆண்டு கால பழைய பாலத்தை அகற்றும் பணி தீவிரம் நடைபெறும். 108 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்குகிறது. பாதுகாப்பு கருதி மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம். அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம்” என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு முதல்வர் எழுப்பிய கேள்விகள் – அண்ணாமலை காட்டமான பதில்
பாஜக அண்ணாமலை பதிவு: “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி […]
வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 […]
தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் அருகே சின்னிவாக்கம் கிராமத்தில் நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிகிச்சைக்கு பயந்து பெற்றோரிடம் நாய் கடிதத்தை மறுத்தால் ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]
கிரீன்லாந்து விவகாரத்தில் பின் வாங்கினார் டிரம்ப்
கிரீன்லாந்து பகுதியை ஆக்கிரமிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் தற்போது ராணுவ மூலம் அந்த தீவை கைப்பற்று முயற்சி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன் விளைவாக நெருக்கடி குறைந்துள்ளது.