கொங்கு பகுதிகளில் அதிக விவாகரத்து – அண்ணாமலை தகவல்
திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இந்து மதத்தினர் அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனர். அதுவும் கொங்கு பகுதிகளில், அதிக அளவு விவாகரத்து நடக்கிறது. தற்போதுள்ள ஜென்சி மற்றும் ஜென் ஆல்ஃபா போன்ற தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும். என்றார்
குறைந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 16) சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து ஒரு சவரன் ரூ. 98,800-க்கும் கிராமுக்கு ரூ. 165 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!
திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார். இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். […]
குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்
விஜய் கூட்டத்துக்கு புதிய கட்டுப்பாடு
ஈரோட்டில் தமிழக வெட்டி கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்று“போதுமான CCTV-க்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். Drone Camera மூலம் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது
சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. […]
வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் கொண்டாட தமிழகம் வரும் மோடி.
தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக வரவுள்ளார் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பிரச்சார முன்னோட்டம் தான் இந்த நிகழ்ச்சி என கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிர்மலா சீதாராமன் 24வது இடம்
பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்று உள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் […]
உரிமம் இல்லாத நாய்களுக்கு இன்று முதல் அபராதம்
சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க 15 குழுக்கள் நியமனம் செய்யப் பட்டு உள்ளன என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.