இந்தியா உடன் ராணுவ உறவை வலுப்படுத்திய ரஷ்யா!

இந்தியா – ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்! இதன் மூலம் ரஷ்யாவின் வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அதேபோல் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்கிறது. ராணுவப் பயிற்சி, பேரிடர் பணிகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!

2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்… 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார். 3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் […]

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. சென்னை முதல் குமரி வரை 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், […]

SIR பணிகள் – 58 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்!

மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இறந்தவர்கள் 24 லட்சம், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் மற்றும் போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் உள்பட 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்!

திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை வெளியேற்றவும், பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 90.78 ஆகக் குறைந்தது

ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்

திமுக கூட்டணி தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் சந்தித்தார்கள் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சந்திப்பு என தகவல்

சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திகையை ஏற்க கோர்ட் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி அருகே மூடுபணியால் 3 கார்கள் மோதல் 4 பேர் பலி.

மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன. இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் […]