வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.254க்கும், ஒரு கிலோ ரூ.2,54,000க்கும் விற்பனை […]

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் […]

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்ததால் பரபரப்பு. விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுக்க விடுக்க தான் வந்தோம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர், இனி கட்டாயமாக உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இடியாப்பம் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உணவு […]

சென்னை : 502 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை

ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர். 502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது, ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு […]

காஷ்மீர் போல மாறிய ஊட்டி

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அவலாஞ்சி, அப்பர்பவானி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடும் உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. ஊட்டி தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குறிப்பாக காலை நேரத்தில் குட்டி காஷ்மீரை போல் ஊட்டி தலைகுந்தா பகுதி காணப்படுகிறது. வழக்கமாக இந்த குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கும். இந்த ஆண்டு இப்பகுதியில் உறை பனிப்பொழிவு ரீல்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு […]

ஒரு ஆயிரம் கோடி வசூலை எட்டும் மாதவன் படம்

இந்தியாவில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த ‘துரந்தர்’, வசூலில் முதலிடத்தில் இருந்த ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை முந்தியிருக்கிறது. ‘துரந்தர்’ இந்தியாவில் ரூ.600 கோடியும் உலகம் முழுவதும் இப்போது வரை ரூ.925 கோடியையும் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் வசூலைக் குறித்த 10 படங்கள்

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகியுள்ளன. இதில், 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன.

விராட் கோலி புதிய சாதனை

15 ஆண்​டு​களுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் களமிறங்​கிய விராட் கோலி ஆந்​திர அணிக்கு எதி​ராக 131 ரன்​கள் எடுத்​தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் அதிவேக​மாக 16 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்​தார். தனது 330-வது இன்​னிங்​ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் இந்​திய அணி​யின் முன்​னாள் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் 391 இன்​னிங்​ஸ்​களில் 16 ஆயிரம் ரன்​களைக் கடந்​திருந்​ததே […]

ஆம்னி பஸ் லாரி மோதல் 20 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 20பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது.