முதலில் சுட்டுவிட்டுதான் பேச்சுவார்த்தை!

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம் தீட்டி வரும் நிலையில், அத்தீவை நிர்வகிக்கும் டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை செல்வோர் கவனிக்க…

சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல்.

ஆட்சியில் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி.

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது; கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. – அமைச்சர் ஐ.பெரியசாமி

அயோத்தியில் தடை!

அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை! உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

பராசக்தி தோல்வி படம்: திமுகவை சீண்டும் காங்கிரஸ்.

ராகுல் காந்தியின் நெருக்கமான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு. “செய்தி உண்மையா?பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்கபா. இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை வீணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை.” பராசக்தி படத்தில் கீழ்கண்ட வசனம் இருப்பதாக வந்த செய்தியை பகிர்ந்து மாணிக்கம் தாகூர் இப்படி கேள்வி கேட்டுள்ளார். “தமிழுக்கு பண்ண துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது – […]

அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்: ட்ரம்ப்.

சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. எனது மனசாட்சியும், சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும். எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை, நான் மக்களைக் காயப்படுத்தவும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்” டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.

சென்னையின் “கடும் குளிர்”

சென்னையில் நிலவும் “கடும் குளிர்” குறித்து பலரும் கேட்கிறார்கள். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மிகக் குறைவாக இருந்தது. இது நாளை மற்றும் நாளை மறுநாளும் நீடிக்கலாம் (இருப்பினும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது). பொங்கல் பண்டிகை முதல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு நேரங்களில் குளிர் நிலவும். மதிய நேரங்களில் மீண்டும் வெப்பம் அதிகரித்து, சென்னையின் […]

ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில்,அங்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது தொலைதூர வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று சிறிது நேரம் இந்த வசதி அனுமதிக்கப்பட்டபோது அமெரிக்க தொழிலதிபர் எல்லாம் நடத்தும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை உடனடியாக தொடங்கப்பட்டது.ஆனால் ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் முடக்கியது நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையும் முடக்கியது.. எங்களது இணைய சேவையை எந்த […]

கூட்டணிக்கு வரும் புதிய கட்சி -எடப்பாடி தகவல்

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி பா.ம.க ஆகியோர் இணைந்துள்ளனர் தற்போது மேலூம் ஒரு கட்சி ஓரிருநாளில் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்

ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்