அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
விஜய் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தேர்தல் யூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல் பட்டு வருகிறார் அவர் கட்சியின் மாநாடு மட்டும் பொதுக்கூட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நீதி பெற்று தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடக்கிறது. அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.
புதிய நீர்த்தேக்கம் அமைக்க எதிர்ப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை குடும்ப விழா ஆக்குவதா ?-அதிமுக கண்டனம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்
பிரேமலதா பிடிவாதத்தால் கூட்டணியில் சிக்கல்
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமக-வை விட தங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்று கேட்பதால் அந்தக் கட்சியுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கைது பயத்தில் சவுக்கு சங்கர்
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுதலை பெற்றார். தற்போது நேற்று இரவு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பெயரில் தன்னை ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
தங்கம் விலை புதிய உச்சம்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து ரூ.1,04,960 விற்பனையாகிறது ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கு விற்பனை ஆகிறது.
முதலில் சுட்டுவிட்டுதான் பேச்சுவார்த்தை!
கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம் தீட்டி வரும் நிலையில், அத்தீவை நிர்வகிக்கும் டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை செல்வோர் கவனிக்க…
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல்.