வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
வருகிற பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை மீண்டும் திறப்பு எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிரதிநிதியின் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடைசாத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. பின்பு, கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.
தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஓஎம்ஆர், ஈசிஆரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
டிரம்ப் தொடங்கிய புதிய சர்வதேச அமைப்பு
ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த கோலி
இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
பராசக்தி ஹீரோ நான் தான் – சீமான்
பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான் தான். தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும் போது, நானே கத்தியது போல இருந்தது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
விஜய் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தேர்தல் யூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல் பட்டு வருகிறார் அவர் கட்சியின் மாநாடு மட்டும் பொதுக்கூட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நீதி பெற்று தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடக்கிறது. அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.