செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் தண்டவாளம் உடைந்ததால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

9 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், முதற் கட்டமாக நான்கு பெட்டிகளை அகற்றம். துண்டு துண்டுகளாக உடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதம்