செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் சரவணா நகர் பூங்காவில் 2245 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மரக்கன்று எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ராஜலட்சுமி, மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்* செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்* மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர் -பிரதமர்

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு. […]

முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது

சிறந்த மாநகராட்சி – கோவை சிறந்த நகராட்சி – திருவாரூர் சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சி 14வது மண்டலம் சிறந்த பேரூராட்சி – சூலூர்(கோவை மாவட்டம்) 78ஆவது சுதந்திர தின விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார் செயலாளர் டாக்டர் சக்திஷ்நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்.

பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]

கோவில் விழாவில் பட்டாக்கத்தியுடன் இளைஞரை வெட்ட முயலும் வீடியோ வைரல்

சென்னை பம்மலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியை கொண்டு வெட்ட முயலும் இளைஞரை சக நண்பர்கள் மடக்கி பிடிக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் ஆலயத்தில் 57 வது ஆம் ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் […]

தாம்பரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மே தின விழா உதவி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர் மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் […]

குரோம்பேட்டை அமல அன்னை ஆலய தேர் பவனி

200 ஆண்டுகள் பழமையான குரோம்பேட்டை அமல அன்னை ஆலைய தேர் திருவிழா, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அமல அன்னை ஆலையத்தில் தேர் திருவிழா இன்று நடை பெற்றது. முன்னதாக அருள் முனைவர் பிரன்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில் திரளானவர்கள் முன்னிலையில் வண்ண வண்ண மலர்களால் அளங்காரம் செய்யப்பட்ட அமல அன்னையின் […]

குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

09/03/24 (சனிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.R.கார்த்திக் [CEO – R.K. Groups] மற்றும் Dr.B.ரேஷ்மி கார்த்திக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பள்ளி தாளாளர் Rev.Sr.அல்போன்சா பீட்டர் மற்றும் தலைமை ஆசிரியை Rev.Sr.செலின் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் சேர்க்கை விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 7397397940/ 7200014829.