2024ம் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் குழுக்கள் அமைப்பு;

கே.பி.முனுசாமி தலைமையில் 5பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு; நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் தயாரிப்புக் குழு; தம்பிதுரை தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு; முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

நாடாளுமன்றத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி? எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல்- ஆயத்தமாகும் அதிமுக

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணிகளை தொடங்கியது. 76 அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்க தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இன்று மாலை மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனை […]

சமீபத்தில் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது

இதில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை எம்எல்ஏ ஆவதற்கு முன்பாகவே அமைச்சராகியது ராஜஸ்தான் அரசு. இதில் பாஜக அமைச்சர் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதற்கான முடிவு இன்று வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் 12750 வாக்கு வித்தியாசத்தில் பாஜக அமைச்சரை தோற்கடித்துள்ளார் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது..

ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு களமிறங்கி உள்ளது. முந்தைய அறிவிப்பின்படி ஜன.7(நேற்று) முதல் […]

4 மாநில தேர்தல் – முதல்வர் வாழ்த்து

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள்

தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி

தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் வருவோம் எனவும், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.