7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]
ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர்

மும்பை தேசிய மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ரத்தன் டாடாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப் பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் […]
ஆளுநர் மாளிகையில்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற பதவியேற்பு விழாவில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வி. செந்தில் பாலாஜி அவர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை […]
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.