கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றின் காரணத்தினால் முத்துலட்சுமி நகர் காந்தி தெரு சந்திப்பில் உள்ள தேநீர் கடை அருகாமையில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேருடன் சாய்ந்ததை அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன்

விரைந்து வந்து சாலையை மறைத்துக் கொண்டிருந்த மரத்தினை அனைத்து துறை அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் அளித்து கொட்டும் மழையிலும் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த தகவலை தெரிந்த மற்ற கட்சி உறுப்பினர்களும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட ஷாவலஸ் காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையின்படி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்ததன் பேரில்

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகறிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்க்கு தகுந்த இடத்தை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டில் ஒரு சிலர் சாலைகள், கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகள் வீசி எறிகிறார்கள்

இதைப் பார்த்த 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் எந்த குடியிருப்பில் இருந்து குப்பை வெளியேற்றப்படுகின்றது என்பதை கண்டறிந்தார். சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக சென்று குப்பைகளை திறந்தவெளியில் தூக்கி எறிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார். அவருடன் துப்புரவு மேற்பார்வையாளர் கார்மேகம் உடன் சென்றார்.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை வைத்ததன் பேரில், 16 கோடி ரூபாய் அரசு நிதியில் செம்பாக்கம் ஏரியின் தூய்மைபணி மற்றும் 8 எம் எல் டி அளவிற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது

இதனையொட்டி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அதுல் மிஷ்ரா , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் உஷா காகர்லா , தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள், நேரில் வந்து செம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஸ்ரீ சர்வமங்களா நகர் சங்க நிர்வாகிகள், சிட்லபாக்கம் ரெய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டதில் […]

சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.

திருபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெற்றி விழாவை தாம்பரம் மாநகர செயளாலரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் மி.அ.வைதியலிங்கம் ணிஜ்.விலிகி.. முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், மாநகர மகளிர் அணி தலைவி பரிமளா சிட்டிபாபு, ஆர்.கே.புரம் சிவா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற்ற போது எடுத்த படம்.

செம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

செம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் 101-வது பிறந்த நாளை ஒட்டி செம்பாக்கம் வடக்கு பகுதி தெற்கு பகுதி சார்பாக செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், சிட்லபாக்கம் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம்

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலைக்கு அருகே அமைந்துள்ள ஏரி நிலப்பரப்பில் விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் “அடையா படையா” எனும் விளையாட்டுப் போட்டிக்கான இலவச கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முகமை தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி பால், முட்டை மற்றும் பழம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில-மாவட்ட அடையா படையா நிர்வாகிகள், ஆதரவாளர் உமாபதி & சன்ஸ் நிறுவன […]

செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]