புதிய நியாய விலைகடை

சிட்லபாக்கம் பகுதி எஸ்.பி.ஐ.காலனி கலைவாணர் சாலை சந்திப்பில் முன்னாள் கவுன்சிலர் பா.பிரதாப் கோரிக்கையின் பேரில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10,00,000 ஒதுக்கி புதிய நியாய விலைகடை அமைக்கப்பட்டது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ 4வது மண்டல தலைவர் டி.காமராஜ், 3வது மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ன உறுப்பினர்கள் செ.சுரேஷ், சி.ஜெகன், எ.மனோகரன், இரா.விஜயகுமார், சி.பரிமளா, ந.சீனிவாசன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், ம.சீனிவாசன், மு.வீரப்பன், […]
பச்சமலையில் இருந்து சிட்லபாக்கம் ஏரிக்கு வரும் வரப்பு கால்வாய் 15 ஆண்டாக தூர்வாராமல் இருந்தது

இதனை தூர்வார வேண்டி டி.ஆர்பாலு எம்.பி., மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. ஆகியோரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் தூர் வாரும் பணிகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் 4வது மண்டல குழுத் தலைவர், டி.காமராஜ், மாநகராட்சி பொறியாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்ட செயலாளர் எம்.வினோத், மா.கன்னியப்பன், டாக்டர் பார்த்திபன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
சிட்லபாக்கத்தில் 20000 விநாயகர் சிலை கண்காட்சி

குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த […]
சிட்லபாக்கம் 43-வது வார்டு

சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து, குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். இதனால் பணியாளர்களின் பணிசுமையும் குறைகின்றது. இவ்வாறு பிரித்து கொடுப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்த 3 நபர்கள், அன்னை தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா, கஸ்தூரிபாய் தெரு அஷ்வதா அப்பார்ட்மென்ட் குடியிருப்பை சேர்ந்த அமுதா மற்றும் சின்னத்தாய் அவர்களை அந்த பகுதியின் சுகாதார கண்கானிப்பாளர் கார்மேகம் தேர்வு செய்தார். அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சால்வை அணிவித்து […]
சிட்லப்பாக்கத்தில் மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வார்டு முழுவதும் மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து உரமாக்குவதற்கு ஏற்பாடு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறான மரக்கிளைகளை பெரும்பாலான சூழ்நிலையில் அப்படியே […]
சிட்லபாக்கம் பகுதியில் தேவையற்ற மரக்கிளைகளை அரைத்து உரமாக்கும் எந்திரம் அறிமுகம்

சிட்லபாக்கம் பகுதியில் தேவையற்ற மரக்கிளைகளை வெட்டி அரைத்து உரமாக்கும் எந்திரம் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் .சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மறக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.வார்டு முழுவது மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து […]
சிட்லபாக்கம் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்னும் சிறந்த சித்தாந்தத்தில் செயல்பட்டு வரும் நம் சீர்மிகு மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் இன்று தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் பகுதிக்கு உட்பட்ட மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் 2வது பிரதான சாலையில் சமையல் கூடம் திறப்பு விழா காலை 8:00 மணி மற்றும் அம்பேத்கர் […]
கிரைண்டரில் இட்லி மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிட்லப்பாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜிலா (38) வீட்டிலேயே இட்லி மாவு அறைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவு அறைத்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெகதீஸ் மனைவி விஜிலா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனை கொண்டு சென்றார். […]
சிட்லபாக்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் சமூக பாதுகாப்பு நலத்துறை மூலம் நான்கு தளம் கொண்ட மகளிர் தங்கும் விடுதினை சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வின்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகு மீனா, மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் கொடூரம் திமுக மகளிர் அணி கொட்டும் மழையில் பரிமளா சிட்டிபாபு தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது […]