“உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரரும், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுகள்;

இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்திற்கும், நம் இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்”

இந்த உலகக்கோப்பை தொடரில் மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடுவேன் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை;

நான் அவருடன் விளையாடுவதற்கான ஒரே வழி இறுதிப்போட்டி தான், அந்த இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை; என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இறுதிப் போட்டியில் மேற்கொள்வேன்”

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம்

அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல். இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை எதிர்கொள்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.

உலகக்கோப்பை செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!!

Rapid game முறையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!! இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் உடன் மோத உள்ளார்!!