சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்

கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

தமிழக சட்டசபை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை […]

ஆளுநர் உரை இல்லாத -சட்டசபை சட்டத்தை திருத்த ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை ஆர். என். ரவியால் படிக்க முடியவில்லை. இதனால் அவர் வந்த சில நிமிடங்களில் வெளியேறினார்.இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆளுநர் குற்றச்சாட்டு நியாயமானது -எடப்பாடி பேட்டி

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் ரவி தனது உரை படிக்க அனுமதிக்கப்படாத கண்டித்து வெளியேறினார். அவர் சென்றதும் எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் ஆளுநர் சொன்ன குற்றச்சாட்டுகள் நியாயமானது தான் தமிழ்நாட்டில் நடப்பதை தான் அவர் கூறுகிறார். ஆனால் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வார் என எதிர்பார்த்து ஸ்டாலின் முன்கூட்டியே அறிக்கை தயாரித்து கொண்டு வந்து வாசிக்கிறார், என குற்றம் சாட்டினார்.

தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

தென்​மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சென்​னைக்கு வாக​னங்​கள் படையெடுத்​த​தால், செங்​கல்​பட்டு அருகே பரனூர் சுங்​கச்சாவடி பகு​தி​யில் நேற்று காலை முதல் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதுத​விர சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில், மறைமலை நகர், கூடு​வாஞ்​சேரி, கிளாம்​பாக்​கம், பெருங்​களத்​தூர், தாம்​பரம் உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களி​லும் ஓஎம்​ஆர், ஈசிஆரிலும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் இன்று காலை வரை செங்​கல்​பட்டு மாவட்ட மற்​றும் சென்னை மாநகர போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீரமைக்​கும் பணி​களில் ஈடு​பட்​டனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.

புதிய நீர்த்தேக்கம் அமைக்க எதிர்ப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.

கைது பயத்தில் சவுக்கு சங்கர்

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுதலை பெற்றார். தற்போது நேற்று இரவு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பெயரில் தன்னை ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]