பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம். அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம்” என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் அருகே சின்னிவாக்கம் கிராமத்தில் நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிகிச்சைக்கு பயந்து பெற்றோரிடம் நாய் கடிதத்தை மறுத்தால் ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]
தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்யேக வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் […]
வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரிய வரவில்லை. நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிவகார்த்திகேயன் தத்து எடுத்த வெள்ளை புலி மரணம்.
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி மரணமடைந்தது நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வெள்ளைப்புலி உயிரிழந்தது. இதேபோல பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்த 22 வயதான ரமேஷ் என்ற சிறுத்தை வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர் இருப்பி னும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறுத்தை பரிதாபமாக இறந் தது. உயிரிழந்த வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தையை மீட்ட ஊழியர்கள் பூங்கா வளாகத் […]
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு “டிஜிட்டல் பயிற்சி திட்டம்”
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான ‘டிஜிட்டல் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
இது பங்காளிச் சண்டைதான்! – டிடிவி தினகரன்
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள் கெட்டுப் போவதில்லை. அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளிச் சண்டை. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை.தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.
தாம்பரம் அருகே லாரி இருசக்கர வாகன மோதல் – 3 பேர் பலி…
தாம்பரம்:- பல்லாவரத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில், கீழ்க்கட்டளை நோக்கி செல்ல, இடப்புறமாக திரும்பியது. அப்போது, கீழ்கட்டளையில் இருந்து, கோவிலம்பாக்கம் நோக்கி செல்ல, எதிர் திசையில் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டேல் இருவரின் மீதும், லாரியின் சக்கரம் ஏரி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு […]
செங்கோட்டையன் கட்சித் தாவலா?
தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.