சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து: உச்சநீதிமன்றம்

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்ட 8 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. இதன்மூலம், ஆம் ஆத்மியின் கவுன்சிலர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் சண்டீகர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார். மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்தது