சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை பேச்சு

மதுராந்தகம் தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம், மழை பெய்கிறது, மழையால் தாமரை, இலை மலரும்.”என்று அவர் கூறினார்.

இளைஞர்களை போதைப்பெருள் கும்பலிடம் ஒப்படைத்த திமுக.. ஸ்டாலின் மீது பிரதமர் மோடி கடும் ‛தாக்கு’

நாம் தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாம் தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன், திமுக அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் […]

பிரதமருக்கு முதல்வர் எழுப்பிய கேள்விகள் – அண்ணாமலை காட்டமான பதில்

பாஜக அண்ணாமலை பதிவு: “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி […]

கூட்டணியை இறுதி செய்ய அதிமுக பாஜக தீவிரம்

கூட்டணியை இறுதி செய்ய அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அப்போது யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் பேசி முடித்து பிரதமர் சென்னை வரும்போது மேடையில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக திமுக அரசை அகற்றும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். திமுக குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் – பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி -புதிய தலைவர் உறுதி

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக நிதின் நவீன் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் குறிப்பிட ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

பாஜக பொறுப்பாளர் பியுஷ் கோயல் எடப்பாடி உடன் சந்திப்பு

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் நாளை சென்னை வருகிறார். அப்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர் முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கிண்டி ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கிறார்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! – பாஜக அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

2026 தமிழகசட்டப்பேரவை தேர்தல் – பொறுப்பாளராக பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார் தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டார் பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டார்

பாஜகவின் சேர்ந்தார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி மற்றும் பிக்பாஸ் தமிழ் புகழ் நமிதா மாரிமுத்து ஆகியோர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வை திரைக்கலைஞர் ஃப்பெசி சிவா ஏற்பாடு செய்திருந்தார்