தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி காருக்கு கூடுதல் வசூல்

தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் தொடர்வண்டிகள் தாம்பரம் இரயில் நிலையத்தில் நிற்கின்றன. மிக நீ……..ண்ட நடைமேடையை முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் எளிதாக கடக்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இருபது ரூபாய் வசூல் செய்கிறார்கள். கேட்டால் போர்டில் பத்து ரூயாய் என்பதை இருபது ரூபாய் என இன்னும் மாற்றி எழுதவில்லை என்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்ற […]