தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில்

“தமிழகத்தில் சமீபகாலமாக 17 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும். மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறோம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்

பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர். சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]