குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
ஆசிரியர் தின விழாவையொட்டி குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஸ்ரீ அய்யாசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர்

10, 12-ம் வகுப்பில் அய்யாசாமி பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை பெற்றதை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது. பிறகு ரீடிங்டன் லிமிடெட் கம்பெனி பள்ளிக்கு 20 டேபிள்களும் 60 சேர்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த கம்பெனியின் நிர்வாகி வெங்கடாச்சாரி இந்த உதவியை செய்தார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானத்தின் தலைமையிலும் தாளாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்தது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்றதற்கு விருது வழங்கினர்.
பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
அண்ணா பாராட்டிய சமூக சேவகர் வி.சந்தானம்

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த சமூக சேவகர் வி.சந்தானம் இவருக்கு தற்போது வயது 86 ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தினசரி மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்று வருகிறார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருஷ்கே உள்ள மூதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்ததும் மும்பைக்கு சென்று பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு முழு நேர மக்கள் பணியை மேற்கொண்டார். தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால் அவருக்கு […]
சமூக ஆர்வலர் சந்தானத்தை பாராட்டுவோம்

சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட 86 வயது முதியவர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் வி.சந்தானம் அவரை அறியாதவர்கள் இந்தப் பகுதிகளில் இல்லை என்றே சொல்லலாம். மனுக்களை எழுதி எழுதி அவரது விரல்கள் தேய்ந்தேபோய் இருக்க வேண்டும். எந்த உயரதிகாரியையும் அவர் விட்டு வைக்கமாட்டார். ‘சில்வண்டு’ போல குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் வாழ்க்கையே புகார் மனு, கோரிக்கை மனு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று போய்க் […]
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது

சமூக சேவகர் வி.சந்தானம் தலைமை ஏற்றார். மீனாட்சிசுந்தரம், அட்வகேட் ராமதாஸ், ராமசுப்பு, மோகன், ராமகிருஷ்ணன், பழனி, சேது, தேவராஜ் கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ், சிராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

காமராஜரின் சிலைக்கு நாடார் சங்கங்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் தலைவர் மதிவாணன், பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர் வெற்றிவேல் முருகேசன், முருகேசன் பாக்கியராஜ், மோரிஸ், நாச்சியார் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாதர் சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி முத்துகிருஷ்ணன் அரங்க ஜோதி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா
குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா வருகிற ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாலை 4 மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை மாத சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி […]
15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]