“சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது யாரும் குறுக்கிட கூடாது என்பது மரபு, ஆனால் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது கூட சபாநாயகர் அப்பாவு குறுக்கீடு செய்கிறார்;
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் எந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் கிடைத்ததில்லை; அதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்கும் அனுமதி வழங்கப்படாது; சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க காலம் தாழ்த்துவதற்காக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது; உண்மையில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் ” -சட்டப்பேரவை வளாக்கத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி