அரசு ரகசியங்களை பாதுகாக்க தவறியதாக குற்றச்சாட்டு : பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கைது!

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவரான ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் அவரை சனிக்கிழமை இரவு மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.குரேஷி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய தகவலின் ரகசியத்தை காக்க தவறிய குற்ற்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இஸ்லாமாபாத் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை மத்திய புலனாய்வு முகமை ஒருநாள் […]
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 182 பேர் கைது

பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை […]
நுங்கம்பாக்கத்தில் மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2பேர் கைது

நுங்கம்பாக்கத்தில் மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62), முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களிடம் இருந்து ரூ. 45 லட்சத்திலான கள்ள நோட்டு, நோட்டு அச்சிட பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற விஞ்ஞானி மீது ஏன் தேசத் துரோக வழக்கு பதியவில்லை

அவரைக் காப்பாற்றத்தான் தேசத் துரோக சட்டம் நீக்கப்படுகிறதா? ➖➖➖➖➖➖➖➖ ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானி கைது.. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) மூத்த விஞ்ஞாளியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஓ. ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை […]
பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்ற 3பேர் கைது

பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட துவங்கினார். அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை மேற்கண்ட போது 100, கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் […]
குரோம்பேட்டையில் பெயிண்டர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பதி கைது

குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி தனது வீட்டிற்கு மது அருந்திவிட்டு இரவு 11 மணிக்கு உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்றுள்ளார். அப்போது அர்ஜுனின் பக்கத்து வீட்டு வாசலில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. இதை அர்ஜுன் தான் இங்கு போட்டார் என்று எண்ணிய பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி (தனியார் பள்ளி ஆசிரியை) அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அர்ஜுனை […]
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

கைதானவர்களின் விஷ்னு (27) என்பவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளார். 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) இருவரும் கைது. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே யாக்கோபுரம் பேருந்து நிலையத்தில் செல்வன் (35) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வன் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி! ரூ.12.60 கோடி கமிஷன் வாங்கிக்கொண்டு தலைமறைவானவரை தேடுகிறது போலிஸ்!
தொழிலதிபருக்கு கடன் பெற்றுத்தருவதாக கூறி, 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர். கோவையை சேர்ந்த ராஜன் பாபு என்பவர், காற்றாலை மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 500 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்றுதரும் ஏஜெண்ட்டான சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் ராஜன்பாபுவிற்கு […]
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே நகை வியாபாரி சேஷராமை தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேஷராமை வழிமறித்த கத்தியால் வெட்டி நகை,பணத்தை கொள்ளையடித்த எழிலரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொழுவூர் பகுதியில் நகைவியாபாரி சேஷராமை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் ஏற்கெனவே ஆதித்யா, சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.