முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ (7.12.2023) அனகாபுத்தூர்‌ பகுதியில்‌ “மிக்ஜாம்‌’ புயலினால்‌ ஏற்பட்ட கனமழையால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு

உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பொருட்களையும்‌ வழங்கினார்‌. உடன்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌, தா.மோ.அன்பரசன்‌, உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, இ.கருணாநிதி, வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை செயலாளர்‌ சி.சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத்‌, தாம்பரம்‌ மாநகராட்சி மேயர்‌ கே.வசந்தகுமாரி, துணை மேயர்‌ ஜி.காமராஜ்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் சீமான் கடும் எதிர்ப்பு

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அகற்றி வருகின்றனர். வீடுகளை இழந்து தவித்து வரும் பொதுமக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார். அபபோது பெண்கள் சிலர் காலில் விழுந்து கதறி அழுதனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர்,டோபி கானா தெரு,சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட […]