எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!

நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்”

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாடு – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபியைதமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் தீடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் […]
அதிமுக போட்ட பிச்சை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 மாத எம்எல்ஏக்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது” – அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள்.
தமிழக தொழில்துறையை அதலபாதாளத்திற்கு தள்ளிய தி.மு.க. அரசு வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில்முனைவோர் அரசின் கையாலாகா தனத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
தாம்பரம் தீமிதி திருவிழாவில் விழுந்து அதிமுக பிரமுகர், மனைவி கருகினர்

சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி […]
தாம்பரம் ஏரிகளில் கழிவு நீர் அதிமுக குற்றச்சாட்டு

தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள். பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் […]
சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர்,

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், போற்றுதலுக்குரிய எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தமிழகத்தில் விடியா தி.மு.க ஆட்சியில் தினம்தோறும் அரங்கேறும் கள்ளச்சாராய மரணங்கள், கொலை-கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், இளைய சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவும் போதைப்பொருள் கலாச்சாரம், போன்று சமூக சீர்கேடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில்விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் […]