ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவு!

2 நாள் முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜசேகரை துபாயில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கு செல்ல உள்ளனர்

ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் சென்னை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குழு துபாய் செல்கிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் ஏற்கனவே துபாய் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். நாளை அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.