உலக அழகிக்கு 16 வயதில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை
உலக அழகி பட்டம் வென்ற ஓபல் சுச்சாதா, 16 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபல் சுச்சாதா கூறும்போது, “உலக அழகி பட்டம் வென்ற முதல் தாய்லாந்து பெண்ணாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. 16 வயதில் எனக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது நான் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்