ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு
சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]
குர்ஆன் சாட்சியாக பதவியேற்ற நியூயார்க் மேயர்
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு
உலக கால்பந்து சம்மேளன (பிபா) நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தை சேர்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் குமார், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா புர்கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்களாக தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முரளிதரன் பாண்டுரங்கன்(புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]
முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு
‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்
ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]
2026 மிகவும் ஆபத்தான ஆண்டு…பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்.!
பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை . 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்.. […]
ஐபோன் 17 இந்தியாவில் விற்பனை தொடக்கம்
ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 17 ரக ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளதுஇதன் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியது புதிய போன் வாங்குவதற்காக மும்பையில் ஐபோன் கடைகளில் ஏராளமான பேர் வரிசையில் நின்று வாங்கினார்கள்.ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் இப்போது தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
HIB விசாவை குறைத்த ஐ.டி. நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், அமெரிக்காவில் பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தும் H-1B விசாவிற்கான தங்கள் சார்ந்திருப்பைக் குறைத்துக் கொண்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ ஆகியவை, H-1B விசா விண்ணப்பங்களை சராசரியாக 46% குறைத்துள்ளன. இது, உலகளாவிய தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது. இந்த […]
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார்
மோடி சிறந்த பிரதமர் – டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : மோடி சிறந்த பிரதமர். ஆனால் அவர் இப்போது செய்வது தான் பிடிக்கவில்லை . அதற்காத இந்தியா – பாசிஸ்தான் உறவில் மாற்றம் வராது. என்றார்.