குர்ஆன் சாட்சியாக பதவியேற்ற நியூயார்க் மேயர்
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு
உலக கால்பந்து சம்மேளன (பிபா) நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தை சேர்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் குமார், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா புர்கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்களாக தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முரளிதரன் பாண்டுரங்கன்(புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]
முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு
‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்
ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]
2026 மிகவும் ஆபத்தான ஆண்டு…பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்.!
பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை . 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்.. […]
கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
டெல்லி:டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள […]
பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின் மோடிக்கு…
ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman – தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார். இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் […]
தமிழகம் மீது புடின் அக்கறை!
இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு காஸ், எண்ணெய், நிலக்கரி சப்ளை செய்வதில் ரஷ்யா முக்கிய நாடாக உள்ளது’. ‘தமிழகத்தில் முக்கிய திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். கூடன்குளம் அணுமின் நிலையம் மேலும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியர்கள் மிக மலிவான விலையில் மின்சக்தியை பயன்படுத்தலாம்- டில்லியில் ரஷ்ய அதிபர் புடின் பேட்டி கூடன்குளத்தில் உள்ள 6 உலைகளில் தற்போது இரண்டில் மின் உற்பத்தி நடக்கிறது. 3வது உலைக்கான யுரேனியம் […]
ரஷ்யா எங்கள் நண்பன். நரேந்திர மோடி.
இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது. இந்த நட்பு உறவுக்கு புடின் 25 ஆண்டுகளுக்கு முன்னேரே நமக்கு உதவியாக இருந்தார். பொருளாதார முன்னேற்றம், யூரியா தயாரிப்பு, அணு தயாரிப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செல்லும். ரஷ்யர்களுக்கு விரைவில் 30 நாள் இலவச சுற்றுலா விசா வழங்க ஏற்பாடு நடக்கிறது. உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம்.