குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

குரோஷியா நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. அதன்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் பின் வாங்கினார் டிரம்ப்

கிரீன்லாந்து பகுதியை ஆக்கிரமிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் தற்போது ராணுவ மூலம் அந்த தீவை கைப்பற்று முயற்சி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன் விளைவாக நெருக்கடி குறைந்துள்ளது.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றால் ஈரானை அமெரிக்கா அழித்துவிடும். ஈரான் என்ற நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி துடைத்தெறியப்படும். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளேன் – என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.

டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணித்த Air Force One விமானம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில், பயணத்தின் போது சிறிய மின்சார கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் வாஷிங்டனில் உள்ள Joint Base Andrews விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட 30–40 நிமிடங்களுக்குள் “சிறிய மின்சார பிரச்சினை” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழு இந்த முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் […]

அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?

அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும் போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே விமானம் (Boeing E-4B Nightwatch) பறக்கவிடப்படும். இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகால வரலாற்றில் கடந்த வாரத்தில் அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானத்தைக் கண்டதாக பலரும் தெரிவித்தனர். டூம்ஸ்டே, மிகவும் ரகசியமான ஒரு போர் விமானம். தரையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வரும் போது, அதிபரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த விமானத்தைப் பயன்படுத்திக் […]

சீனாவின் பிறப்பு விகிதம் சரிவு

2025இல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. 1,000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த அளவு. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு மானியங்களை அறிவித்தாலும், அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலை இது வெளிப்படுத்துகிறது. சீன இளைஞர்களிடையே குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதும் காரணமாக பார்க்கப்படுவதால், புதுமண தம்பதிகளுக்கு பண வவுச்சர்கள் […]

டிரம்ப் தொடங்கிய புதிய சர்வதேச அமைப்பு

ஐ.​நா. சபைக்கு மாற்​றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்​ளார். இந்த புதிய அமைப்​பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்​பின​ராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்​துள்​ளார்.பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவுக்கு 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கியது வெனிசுவேலா

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு

சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]