மது போதையில் மாடியிலிருந்து குதித்த வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி

தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் டேனியல் தற்கொலை என்னத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் […]

தாம்பரம்‌ மாநகராட்சியில் ஆணையாளர் ஆலோசனைக்‌ கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தினை சிறப்பான முறையில்‌ செயல்படுத்திடும்‌ பொருட்டு இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா தலைமையில்‌ பணிக்குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்‌கூட்டத்தில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

மணிப்பூர் கலவரம்: தாம்பரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

மணிப்பூர் மாநில இனக்கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய, மணிப்பூர் பாஜக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தாம்பரம் பேரூந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் முருகன், மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், விடுதலைச்சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம், தேசிய முஸ்லிம்லீக் மாவட்டதலைவர் அக்பர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சியினர் கலந்துக்கொண்டு […]

தீயணைப்பு படையில் ட்ரோன் பயன்படுத்த முடிவு

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாநில தீயணைப்பு பயிற்சி மையத்தில் புதிய தீயணைப்போருக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி துவங்கபட்டது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள 120 தீயணைப்போருக்கு நியமன ஆணையை வழங்கி அவர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சியினை துவக்கி வைத்தார். மேலும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அலுவலர் இருசம்மாளுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த இயக்குநர் அபாஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி […]

தாம்பரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு அபராதம்

தாம்பரம் மார்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம், 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் முக்கிய குடோன் சீல் வைப்பு மாநகராட்சி சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாம்பரம் மார்கெட் பகுதியில் புழக்கத்தில் உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல்ரசக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட […]

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள்

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் நேரில் பாவையிட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உத்திரவு. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நிலத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தாம்பரம் மாநகராட்சிகான வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் மாநகராட்சி […]

பெருங்களத்தூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வீடுகள்

பெருங்களத்தூரில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் நகர்ப்புற மேம்பாடு வாரிய குடியிப்புகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்பு. பெருங்களத்தூரில் 420 சதுர அடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 192 நகர்ப்புற மறுகுடியிப்பு விடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்தார். குடியிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர கூறினார். உதவி […]

சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோமுத்து நினைவு நாளில் ரூ 8 கோடிக்கு உதவி

ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் மறைந்த லியோ முத்துவின் 8 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆதரவற்ற, வசதி குறைவான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்கான கல்வி உதவிகளை கலைச்செல்வி லியோ முத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாய்ராம் கல்விக்குழும முதன்மை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோ முத்து, சர்மிளா ராஜா ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

கிழக்கு தாம்பரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேரூக்கு பிரஷர் குக்கர் வழங்கினர்கள். அப்போது பேசிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் பல்வேறு விதங்களில் அதிக அளவு வளர்சி பெற்றுள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் உள்ளதால் அரசு தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அதற்கு […]

இலவசமாக ஒரு கிலோ தக்காளி, குடை தாம்பரம் அதிமுகவினர் அசத்தல்

கிழக்கு தாம்பரம் ஆண்டாள் நகர் பூங்கா அருகே 47 வார்டு அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளியுடன், குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்ச டி.கே.எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஒருகிலோ தக்களியுடன், குடையும் வழங்கினார்கள். தக்களி விலை கிலோ 120 க்கு விற்கும் நிலையில் குடையுடன் ஒருகிலோ தக்காளி வழங்கியதால் பெண்கள் ஆண்கள் என ஆர்வத்துடன் […]